Kannan and Agasthiyar

Home » Blog » Kannan and Agasthiyar

கீதையில் கண்ணன் ஆத்துமஞானத்தையும் தத்துவஞானத்தையும் சரி சமமாக குரிப்பிட்டிருக்கிரார். ஆத்துமஞானத்தை பற்றி பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் தத்துவஞானம் என்றால் என்ன? தத்துவம் என்றது எதை குறிக்கிறது? தத்துவம்-300 என்ற நூல் யாரால் இயற்றப்பட்டது?

adhyātma-jñāna-nityatvaṁ tattva-jñānārtha-darśhanametaj jñānam iti proktam ajñānaṁ yad ato ’nyathā – Ch-13, Ver 11

अध्यात्मज्ञाननित्यत्वं तत्वज्ञानार्थदर्शनम् |एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा || 

சித்தர் அகத்தியர் தத்துவம்-300 என்ற நூலில் தத்துவங்களை பற்றி விவரமாகவும் விசேடமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பண்டய காலத்தில் இருந்து பாரததில் பல்வேரு சமயங்கள் உள்ளன. தத்துவங்கள் எல்லா சமயத்தினருக்கும் பொதுவு. ஒவ்வொரு சமயத்தினரும் தம் கொள்கைகளை தத்துவங்கள் வழியாகவே நிரூபித்து இருக்கிரார்கள். ஆகையால் எந்த ஒரு சமயத்தை பற்றியும் முழுமையாக அறிவதற்க்கு தத்துவஞானம் அவசியம். தத்துவஞான ஆராய்ச்சிக்காக தனி பகுதிகள் நலந்தா மற்றும் சில பண்டைய பல்கலைகழங்களில் இருந்தன.

அகத்தியர் சித்தர்களின் கொள்கைகளை  தத்துவம்-300 என்ற நூலில் குறித்து காட்டியிருக்கிரார்,  பிற சமயங்களை பற்றியும் அதில் சில குறிப்புகள் உள்ளன. அந்த நூல் தத்துவஞானத்திற்க்கு ஒரு எடுத்துகாட்டு. இவ்வாறான விவரங்களை அறிவிக்கும் வட மொழி ஏட்டுசுவடிகள் காலப்போக்கில் அழிந்திருக்கலாம். தமிழ் சுவடிகளை நம்முன்னோர்கள் ஆர்வத்துடன் நமக்காக காப்பாற்றி இருக்கிறார்கள். 

பசு பதி பாசம் என்பது சித்தர்களின் முக்க்கிய சித்தாந்தம். பதி என்பது சிவனை குறிக்கிறது. பசு என்பது பல விதமான ஜீவங்களை குறிக்கிறது. பதியிற்கும் பசுவிற்கும் உள்ள வித்தியாசம் பாசத்தினால். பாசத்தை விட்ட பசு சிவனே ஆகிவிடுகிறது. இதுதான் உலகத்தின் உண்மை.

இந்த உண்மையை அறிய முதல் படிதான் தத்துவங்களின் அறிமுகம். முப்பத்து ஆறு தத்துவங்கள் உள் கணக்கு. தொண்ணூறு தத்துவங்கள் வெளி தத்துவங்கள். இந்த முதல் முப்பத்து ஆறும் மூன்று விதமாக பிறிக்க படுகின்றன. இதில் முதல் பிரிவு ஆத்தும தத்துவங்கள். இரண்டாவது பிரிவு வித்தியா தத்துவங்கள் எனப்படுகின்றன. மூன்றாவது சிவதத்துவங்களாகின்றன. இவற்றை பற்றி அறிந்தால் சித்தம் நிலை படுகிறது. நிலைத்த சித்தத்துடன் ஒருவர் சித்தர்களின் யோக பயிற்ச்சிகளில் ஈடுபடுகிறார்.

அகத்தியர் எளிமையாக இதைபற்றித்தான் தன் தத்துவம்-300 என்ற நூலில் விளக்குகிறார். இந்த நூலை அவர் மூன்று பாகமாக பிரித்துள்ளார். முதலாவது வாதத்தை பற்றியது. இரண்டாவது தத்துவத்தை பற்றியது. மூன்றாவது ஞானத்தைப் பற்றியது. இதில் இரண்டாவது பாகம் நூறு பாட்டுக்களை கொண்டது. எவரும் படித்து சிறிதளவாவது அறிந்து கொள்ள முடியும்.

Tattuvam-300: of Agasthiyar: ramadas, Krishna k: 9781722771768: Amazon.com:  Books
My translation of the Tattuvam-300 text of Siddhar Agasthiyar

A list of books by the author – click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial